பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் நோய்கள்

1. செர்கோஸ்போரா இலைப் புள்ளி: செர்கோஸ்போரா ஜாஸ்மிநிகோலா

அறிகுறிகள் :

  • 2-8 மிமீ குறுக்களவு கொண்ட வட்ட ஒழுங்கற்ற செம்பழுப்பு புள்ளிகள் இலைகளின் மேற்பரப்பில் தோன்றும்.
  • பின்னர் ஒழுங்கற்ற புள்ளிகள் இலைகளின் மற்ற பகுதிகளிலும் பருவும்.

மேலாண்மை :

  • கார்பென்டிசம் 0.1% தெளிக்கவும்

2. ஆல்டர்னேரியா இலைக் கருகல்: அல்டர்னேரியா ஜாஸ்மிநி, அல்டர்னேரியா அல்டர்னேட்டா


அறிகுறிகள் :

  • இலைகளில் அடர் பழுப்பு புள்ளிகள் தோன்றும்.
  • புள்ளிகள் மற்ற பகுதிகளிலும் பரவி இலைகள் கருகத் தொடங்கும்.
  • பொது மைய வளையங்கள், காயங்கள் காணப்படும். இந்நோய் தண்டு, இலைக் காம்பு மற்றும் மலர்களை பாதிக்கிறது.

மேலாண்மை :

  • உதிர்ந்த இலைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
  • மேன்கோசெப் 0.25% தெளிக்கவும்.

3. கழுத்தழுகல் மற்றும் வேரழுகல் நோய்: ஸ்க்லரோஷியம் ரோல்ஃப்சி


அறிகுறிகள் :

  • தாவரங்களின் எல்லா நிலைகளிலும் தொற்று ஏற்படும். முதலில் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பின்பு இளம் இலைகள் மஞ்சளாகும். இறுதியில் தாவரம் இறந்துவிடும்.
  • வேரில் கறுப்பு நிற மாற்றத்தை காண முடியும்.
  • பாதிக்கப்பட்ட திசுக்கள் மற்றும் தண்டுகளில் பூஞ்சை இழை முடிச்சுகள் தோன்றும்.

மேலாண்மை :

  • எருவுடன் டிரைகோடெர்மா விரிடி கலந்து அளிக்கவும்.

4. பச்சைப் பூ நோய்: பைட்டோபிளாஸ்மா

அறிகுறிகள் :

  • இலைகள் சிறியதாக புதர் போல் காணப்படும். பச்சை இலை போன்று பூக்கள் பூக்கும்.

மேலாண்மை :

  • ஆரோக்கியமான தாவரத்தை தேர்ந்தெடுத்து தாவர துண்டுகள் வெட்டவும்.
  • நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகளை தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015